Our Feeds


Wednesday, August 19, 2026

Zameera

ஓகஸ்ட் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று


 ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


 


நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


 


அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் தொகையை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »