Our Feeds


Friday, September 4, 2026

Zameera

16 வயது சிறுவன் சித்திரவதை: சிறுவர் இல்ல காப்பாளர் தம்பதி கைது


 கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். 


சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்த் தூள் தூவி துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


பாதிக்கப்பட்ட சிறுவன் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


சந்தேகநபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »