Our Feeds


Friday, September 18, 2026

Zameera

திலித் ஜயவீரவின் ரிட் மனு: தீர்ப்பு 30ஆம் திகதி

 


பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) அறிவித்துள்ளது. 


நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். 


குறித்த ரிட் மனுவானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, இம்மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »