Our Feeds


Wednesday, September 9, 2026

Zameera

எல்நினோ தாக்கம்: 8 மாவட்டங்கள் பாதிப்பு


 எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.


 


அந்த 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.


 


அத்துடன், 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 நபர்கள் இந்த எல்நினோ சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


 


இந்தத் தாக்கம் காரணமாக 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


இதற்கமைய 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 132,748 நபர்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.


 


இதில் அதிகளவாக மொனராகலை மாவட்டத்திற்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளடன், அங்கு 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


அம்பாறை மாவட்டத்தின் 03 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 3,794 குடும்பங்களைச் சேர்ந்த 12,047 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »