பிரபா கணேசனுடனான சந்திப்பில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளருமான பிரபா கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் இன்று சந்திப்பு ஏற்பட்டது.
இச்சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, பிரபா கணேசன் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள ஒருமித்த எதிர்கட்சியின் கூட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சிவில் சமூக அமைப்புகள், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த ஒருமித்த எதிர்கட்சியின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரபா கணேசன், செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தாங்கள் எடுக்கும் முடிவுகளை என்றும் சிந்தித்து நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் பிரபா கணேசனின் கட்சி ஆளும் அரசா
