Our Feeds


Tuesday, September 8, 2026

Zameera

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடந்து விளக்கமறியலில்


 மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (8) உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் நேற்றைய தினம் (7) அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 


பின்னர் சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. 


இந்நிலையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »