மக்கள் மத்தியில் நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் இன ஐக்கியத்தை வளர்ப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் சமாதான மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரை
தடாகத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அஸ்கிரிய பீடம், மல்வத்து பீடம், ராமன்ய நிகாய, அமரபுர நிகாய என்பனவற்றின் சமயத் தலைவர்களும் கிறிஸ்தவ மதத்தலைவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் இந்து மதத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும் விஷேட பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
