Our Feeds


Wednesday, July 17, 2019

www.shortnews.lk

மைத்திரி தரப்பிலிருக்கும் இருவர் ஐ.தே.க வுடன் இணைக்கிறார்கள்.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் மொஹான் லால் க்ரேரோ ஆகியோர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9,10ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது குறித்த இரு உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது வாக்களிப்பை தவிர்த்திருந்தமையும் அதற்கு பிரதான காரணமென தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »