Our Feeds


Monday, August 5, 2019

www.shortnews.lk

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் இன்று - காஷ்மீர் முன்னால் முதல்வர் மஹ்பூபா முக்தி

 

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, ``இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று. இரண்டு நாடுகள் வேண்டாம் என இந்தியாவுடன் இணைய கடந்த 1947ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் எடுத்த முடிவு தவறாகியிருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு எடுத்திருக்கும் ஒருதலைபட்சமான சட்டவிரோதமானது. இது, ஜம்மு காஷ்மீரில் இந்தியா, ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்ற பொருளை வழங்கும்.

மேலும், இது இந்தப் பிராந்தியத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் பின்விளைவுகளை உண்டாக்கும். மத்திய அரசின் எண்ணங்கள் இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக மாற்ற எண்ணுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், இந்தியா தோல்வியடைந்திருக்கிறது'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »