நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலவரங்களைக் கையாளும் போது எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது செயற்படும் பொறுப்பு பொலிஸாருக்கும், நீதித்துறையினருக்கும் உள்ளது எனவும், மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் செயற்படுவது சம்பந்தப்பட்ட துறையினரின் பொறுப்பாகும் எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள மாவட்டப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடியினால் எழுதப்பட்ட மூன்று புத்தகங்களை வெளியிடும் நிகழ்வில் இன்று (15) பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
