இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பாராளுமன்றத்தில் கோப் குழு கூடவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
´Batticaloa Campus´ நிறுவனம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக அதன் அதிகாரிகள், ஹீரா அறக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளரை இன்று கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
´Batticaloa Campus´ நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மகாவலி அதிகார சபை மற்றும் முதலீட்டுச் சபை அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
