Our Feeds


Tuesday, October 1, 2019

www.shortnews.lk

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை 05ம் திகதி அறிவிப்பேன். - ஹிஸ்புல்லாஹ்.

 


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கருத்துக்களை வெளி­யிட்டிருந்த நிலையில் அவரிடம் இது தொடர்பாக நேற்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது முடிவினை அறி­விக்கவுள்ளது. இந்த நிலையில் நான் தற்­போது வெளிநாட்டில் நிற்கின்றேன். 

நான் நாட்டுக்கு வந்தவுடன் அவசரமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலை­வர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், பிரமு­கர்கள், உலமாக்கள் ஆகியோருடன் கலந்து­ரையாடியதன் பின்னர் எனது முடிவை எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை அறி­விப்பேன்.

யாரை ஆதரிப்பது அல்லது போட்டியிடு­வதா என்பன குறித்து எனது கருத்தை அன்றைய தினம் வெளியிடுவேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவதென தீர்மானித்தால் 6ஆம் திகதி கட்டுப்பணத்­தினை செலுத்தி 7ஆம் திகதி நியமனப்­பத்திரத்தை தாக்கல் செய்வோம்.

இதுவரை எந்த முடிவுகளையும் நான் எடுக்க வில்லை என அவர் மேலும் தெரிவித்தார். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று 5 ஆம் திகதி அறிவிப்பேன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »