Our Feeds


Saturday, October 19, 2019

www.shortnews.lk

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 938 முறைப்பாடுகள் பதிவு

 



ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 938 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி நிறைவடைந்த 10 நாட்களுக்குள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 900 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 30 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 381 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் மற்றும் 547 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »