Our Feeds


Monday, November 4, 2019

www.shortnews.lk

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பே ஸஹ்ரானின் புகைப்படத்தை பெற்று உளவு பார்க்க பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது - DIG லலித் பத்திநாயக்க

 



உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் மொஹம்மட் ஸஹ்ரான் எனும் பயங்­க­ர­வா­தியின் புகைப்­ப­டத்தைப் பெற்று உளவு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்க, குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட 10 நாட்­க­ளுக்கு முன்பு ( ஏப்ரல் 11 ஆம் திகதி) தனது பொறுப்பின் கீழ் இருந்த பொலிஸ் பிர­தா­னி­க­ளுக்கு உரிய அறி­வு­றுத்­தல்கள் எழுத்து மூலம் வழங்­கப்­பட்­ட­தாக, தாக்­குதல் இடம்­பெறும் போது கொழும்­புக்கு பொறுப்­பாக இருந்­த­வரும் தற்­போது தொடர்­பாடல் மற்றும் போக்­கு­வ­ரத்து சேவைகள் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசா­ரணை ஆணைக் குழுக்கள் சட்­டத்தின் (393 ஆம் அதி­காரம்) 2 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் கடந்த செப்­டம்பர் 21 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்ட ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சாட்சி விசா­ர­ணைகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை 2 ஆவது நாளாக நடை­பெற்ற நிலையில் 2 ஆவது சாட்­சி­யா­ள­ராகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது, 2019.04.11 ஆம் திகதி கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கிடைத்த மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க அனுப்­பிய உளவுத் தகவல் அடங்­கிய விஷேட கடிதம் மற்றும் அதே திக­தியில் அப்­போது கொழும்பின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த அஜித் ரோஹன தனக்கு கீழ் இருந்த உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பிய விஷேட ஆலோ­சனை கடிதம் ஆகி­ய­வற்றை ஆதா­ர­மாகக் கொண்டு அவர் மேற்­படி சாட்­சி ­யத்தை அளித்தார்.

ஆணைக்­கு­ழுவின் தலைவர் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வாவின் தலை­மை­யி­லான மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன, ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான நிஹால் சுனில் ரஜ­பக்ஷ, அத்­த­பத்து லிய­னகே பந்­துல குமார அத்­த­பத்து, ஓய்­வு­ பெற்ற அமைச்சு செயலர் டப்­ளியூ.எம்.எம். அதி­காரி அகியோர் முன்­னி­லையில் அவர் சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.

நேற்று முன்­தினம் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் அய்ஷா ஜின­சேன, பிரதி சொலி­சிட்டர் ஜென­ரல்­க­ளான சஞ்­ஜீவ திஸா­நா­யக்க, சுஹர்ஷி ஹேரத், அரச சட்­ட­வா­தி­க­ளான கே.டி. சம்பத் மற்றும் ஹரீந்ர ஜய­சிங்க ஆகியோர் ஆணைக்­கு­ழுவில் பிர­சன்­ன­மாகி­­ யி­ருந்த நிலையில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் அய்ஷா ஜின­சே­னவின் மேற்­பார்­வையில், பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுகர்ஷி ஹேரத் சாட்­சியை நெறிப்­ப­டுத்­தினார்.

இதன்­போது, சாட்­சி­யா­ள­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க சார்பில் மது ஜய­தி­லக மற்றும் ஷெஹான் டி சில்வா ஆகியோர் ஆணைக் குழுவில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

அவ­ரது சாட்­சி­களின் பிர­காரம்’ 2016 மே மாதம் முதல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக நான் சேவை­யாற்­றினேன். எனக்கு கீழ் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் வல­யங்­களும் மோசடி தடுப்புப் பிரிவு, கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு, குதிரைப் படைப் பிரிவு மற்றும் கடல் பிரிவு ஆகி­யனவும் இருந்­தன. 2019 மார்ச் ஆகும் போது கடல் பிரிவு பிறி­தொரு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் கொண்டு செல்­லப்­பட்­டது.

2019 ஏப்­ர­லாகும் போது, எனது அதி­கா­ரத்தின் கீழ் இருந்த கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பாளராக பொலிஸ் அத்­தி­யட்­சகர் சஞ்­ஜீவ பண்­டா­ரவும், கொழும்பு மத்­திக்கு பொறுப்­பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் உபாலி ஜய­சிங்­கவும், கொழும்பு தெற்­குக்கு பொறுப்­பாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிசாந்த டி சொய்­ஸாவும் செயற்­பட்­ட­துடன் மோசடி தடுப்புப் பிரிவு பணிப்­பா­ள­ராக பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் பிரே­ம­ரத்­னவும், கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பதில் பணிப்­பா­ள­ராக பொலிஸ் அத்­தி­யட்சகர் உதய ஹேமந்­தவும் குதிரைப் படைப் பிரிவு பணிப்­பா­ள­ராக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தம­யந்த விஜே­சி­றியும் கட­மை­யாற்­றினர்.

ஒரு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கடமை என்ன என்­பது தொடர்பில் 1928 ஆம் ஆண்டின் பொலிஸ் வர்த்­த­மானி மற்றும் 2009 ஆம் ஆண்டின் பொலிஸ் மா அதி­பரின் சுற்­று­நி­ருபம் ஊடாக சில விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அதன்­படி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தேவை­யான உயர் திட்­டங்­களை வகுத்தல், அமுல் செய்தல், சட்ட விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை சட்­டத்தின் முன் நிறுத்தல், மனித வளம் மற்றும் பெள­தீக வளங்­களை முகாமை செய்தல், கையாளல் மற்றும் சமூக பொலிஸ் பிரிவை பலப்­ப­டுத்தல் போன்­றன ஒரு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் பணி­க­ளாகும்.என பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க அறி­முக சாட்­சி­யத்தை பதிவு செய்தார்.

அதன் பிறகு அவர் வழங்­கிய சாட்­சியம் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­த­லுடன் சுருக்­க­மாக வரு­மாறு;பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: இந்த விசா­ர­ணைகள் 21/4 அன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய கார­ணிகள் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை அறி­வீரா?

லலித் பத்­தி­நா­யக்க: ஆம் அறிவேன்.பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: இந்தத் தாக்­குதல் தொடர்பில் தாக்­கு­த­லுக்கு முன்னர் உங்­க­ளுக்கு எப்­போது தகவல் கிடைத்­தது?லலித் பத்­தி­நா­யக்க: தனிப்­பட்ட ரீதியில் எனக்குத் தகவல் கிடைத்­தது 20.04.2019 அன்று.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: தனிப்­பட்ட ரீதி­யி­லன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முதல் தகவல் எப்­போது கிடைத்­தது?

லலித் பத்­தி­நா­யக்க: 11.04.2019 அன்று மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க ஊடாக முதல் தகவல் கிடைத்­தது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண தெற்கு, வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் மற்றும் களுத்­துறை பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யி­ருந்த விஷேட கடி­தத்­துடன் கூடிய ஆவ­ணங்கள் ஊடாக அந்த தகவல் அறி­யத்­த­ரப்­பட்­டி­ருந்­தது.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்த ச்மயம் நீங்கள் கட­மையில் இருந்­தீர்­களா?லலித் பத்­தி­நா­யக்க: இல்லை. நான் விடு­மு­றையில் கொழும்­புக்கு வெளியே இருந்தேன்.பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அவ்­வா­றெனில் உங்கள் கட­மை­களை செய்ய பதி­லாக நிய­மிக்­கப்ப்ட்­டி­ருந்­தவர் யார்?லலித் பத்­தி­நா­யக்க: அப்­போது போக்­கு­வ­ரத்து மற்றும் வீதிப் பாது­காப்பு பிரதிப் பொலிச் மா அதி­ப­ராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ­னவே பதில் கட­மை­க­ளுக்­காக நிய­மிக்­கப்ப்ட்­டி­ருந்தார்.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்­கவின் கடிதம், ஆவ­ணங்கள் கிடைத்­த­தாக பதி­வுகள் உள்­ளதா?லலித் பத்­தி­நா­யக்க: ஆம், 11/4 அன்று கிடைத்­துள்­ள­தாக உறு­தி­யா­கி­றது.

( அந்த கடி­தத்தை ஆணைக்­குழு முன் காண்­பிக்­கின்றார். அது 08.04.2019 ஆம் திக­தி­யி­டப்­பட்ட கடிதம். அது சீ – 4 என சாட்­சி­யாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டது)பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்தக் கடிதம் எந்த முறையில் அனுப்­பப்­பட்­டது?

லலித் பத்­தி­நா­யக்க: உறு­தி­யாக தெரிய. பொலிஸ் தகவல் பரி­மாற்­றப்­படும் வீ.பி.என். வலை­ய­மைப்பு ஊடா­கவோ, தொகை நகல் ஊடா­கவோ, நேர­டி­யா­கவோ கிடைத்­தி­ருக்­கலாம்.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: உங்­க­ளது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் எங்கு அமைந்­துள்­ளது?லலித் பத்­தி­நா­யக்க: இலக்கம் 331, ஒல்கொட் மாவத்தை புறக்­கோட்டைபிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் எங்கு அமைந்­துள்­ளது?லலித் பத்­தி­நா­யக்க: கோட்டை, பொலிஸ் தலை­மை­ய­கத்தில்பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கடி­தத்­துக்கு அமை­வாக உமது கட­மை­களை முன்­னெ­டுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன செயற்­பட்­டி­ருந்­தாரா?

லலித் பத்­தி­நா­யக்க: ஆம், அவர் அன்­றைய தினமே அந்த தக­வல்கள் தொடர்பில் செயற்­பட தேவை­யான உத்­த­ர­வு­களை விடுத்­தி­ருந்தார். டி.ஐ.ஜி./ சி.ஓ./பி.ஏ/144 எனும் இலக்­கத்தின் கீழ் அவர் அந்த உத்­த­ர­வு­களை வழங்­கி­யி­ருந்தார்.

11/04/2019 ஆம் திக­தி­யி­டப்­பட்டு மிக முக்­கி­ய­மா­னது என குறிப்­பிட்டு அவ­ரது ஆலோ­சனை, உத்­த­ர­வுகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் வரும் பொலிஸ் வல­யங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­க­ளுக்கும் பனிப்­பா­ளர்­க­ளுக்கும், மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கும் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது.

அவர் அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தில், தற்­கொலை தாக்­குதல் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கிடைக்கப் பெற்­றுள்ள தக­வ­லுக்கு அமை­வா­னது என தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: உங்­களின் கீழா மேல் மாகாண உள­வுத்­துறை நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றது?லலித் பத்­தி­நா­யக்க: இல்லை, அது நேர­டி­யாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் பிரிவு.பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சுஹர்ஷி: அப்­ப­டி­யானால் ஏன் மேல் மாகாண உளவுப் பிரி­வுக்கு அந்த கடி­தத்தை அனுப்­பி­னீர்கள்?

லலித் பத்­தி­நா­யக்க: கொழும்பின் பொலிஸ் நிலை­யங்­களில் தனி­யாக உளவுப் பிரிவு கிடை­யாது. மேல் மாகாண உளவுத் துறை ஊடா­கவே அவர்கள் தக­வல்­களைப் பெற்­றனர். எனவே தான் அவர்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இதன்­போது தலை­யீடு செய்த ஆணைக் குழுவின் தலைவர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி ஜனக் டி சில்வா, ஒவ்­வொரு பொலிஸ் நிலை­யத்­திலும் உளவுப் பிரிவு ஒன­டறை ஸ்தாபித்து முன்­னெ­டுக்க 2014 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபர் விடுத்­துள்ள உத்­த­ரவு தொடர்பில் நீங்கள் அறி­வீர்­களா? என கேள்வி எழுப்­பினார்.

அதற்கு பதி­ல­ளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, ஆம், எனினும் கொழும்பு பொலிஸ் நிலை­யங்­களில் அவ்­வா­றான நடை­மு­றை­யொன்று இருக்­க­வில்லை. அதனை முன்­னெ­டுக்க ஆள­ணியும் பற்­றாக்­கு­றை­யா­கவே இருந்­தது. எனவே, மேல் மாகாண உளவுத் துறை ஊடா­கவே கொழும்பு பொலிஸ் நிலை­யங்­களின் உளவுத் தக­வல்­க­ளுக்­கான தேவை பூர்த்தி செய்­யப்­பட்­டது. அத்­துடன் தேசிய உளவுத் துறை மற்றும் விஷேட நட­வ­டிக்கை பிரி­வி­ட­மி­ருந்தும் தக­வல்கள் பெறப்படும்.

இதன்போது, ஆணையாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ரஜபக்ஷ ,சாதாரணமாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கூட உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறி நீதிமன்றங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்து தடை உத்தரவோ அல்லது நிபந்தனைகளையோ பெறுவீர்கள்ஏன் இந்த விடயத்தில் இப்படியான உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக நீதிமன்றுக்கு கூட அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தாக்குதல் நடத்தப்படலாம் என்றே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடிதத்துடன் கூடிய அறிக்கையில் இருந்தது. அதில் குறிப்பிட்ட தினமோ, இடமோ, உறுதியாக கூறப்பட்டிருக்கவில்லை. உறுதியான உளவுத் தகவல் இல்லாது நீதிமன்றுக்கு சென்று அறிக்கையிட முடியாது. எனப் பதிலளித்தார்.பொறுப்பின் கீழ் இருந்த பொலிஸ் பிர­தா­னி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »