Our Feeds


Tuesday, November 19, 2019

www.shortnews.lk

கோத்தபாயவுடன் முஸ்லிம்கள் கைகோர்க்க வேண்டும் - உலமா சபை கோரிக்கை

 


நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும், சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவு­டனும், அர­சாங்­கத்­து­டனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்­டு­மென்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. நாட்டின் ஏழா­வது நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரி­வித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள டுவிட்டர் பதி­வி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
“புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாழ்த்­துக்கள். இந்­நி­லையில் நாட்டின் பிர­ஜைகள் அனை­வரும், குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கமும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் நாட்டில் சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யு­டனும், அரசாங்கத்துடனும் கைகோர்ப்போம்” என்று அப்பதிவின் ஊடாக ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »