புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்துள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் நியமனம் பெற்று 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்த வக்பு சபை பதவி விலகியுள்ளது.
இதுவரை காலம் வக்பு சபையின் தலைவராகப்பதவி வகித்து வந்த சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் தனது இராஜினாமா கடிதத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கிடம் கையளித்துள்ளதாகவும், ஏனைய உறுப்பினர் களையும் இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வக்பு சபைக்கான நியமன விதிகளின்படி அதன் நியமனங்கள் பொறுப்பான அமைச்சரினாலேயே வழங்கப்படவேண்டும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் நாங்கள் பதவி விலகாவிட்டாலும் பதவி இழக்கப்பட்டுள்ளோம். முஸ்லிம் சமய விவகாரம் தற்போது கலாசார அமைச்சின் கீழேயே உள்ளது. அதற்குப் பொறுப்பான அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வக்பு சபைக்கு புதிய நியமனங்களை பிரதமரே வழங்க வேண்டும்.
