Our Feeds


Wednesday, December 4, 2019

www.shortnews.lk

வக்பு சபை பதவி விலகியது

 


புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மையில் புதிய அர­சாங்­க­மொன்று பத­விக்கு வந்­துள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மினால் நிய­மனம் பெற்று 2015 ஆம் ஆண்டு முதல் இயங்­கி­வந்த வக்பு சபை பதவி வில­கி­யுள்­ளது.
இது­வரை காலம் வக்பு சபையின் தலை­வ­ராகப்பதவி வகித்து வந்த சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்­கிடம் கைய­ளித்­துள்­ள­தா­கவும், ஏனைய உறுப்­பினர் களையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு கோரி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.
வக்பு சபைக்­கான நிய­மன விதி­க­ளின்­படி அதன் நிய­ம­னங்கள் பொறுப்­பான அமைச்­ச­ரி­னா­லேயே வழங்­கப்­ப­ட­வேண்டும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் நாங்கள் பதவி வில­கா­விட்­டாலும் பதவி இழக்­கப்­பட்­டுள்ளோம். முஸ்லிம் சமய விவ­காரம் தற்­போது கலா­சார அமைச்சின் கீழேயே உள்­ளது. அதற்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனவே வக்பு சபைக்கு புதிய நிய­ம­னங்­களை பிர­த­மரே வழங்க வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »