Our Feeds


Wednesday, December 4, 2019

www.shortnews.lk

தனி தீவில் “கைலாசா” என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கி தான் பிரதமராகியுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு

 


பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிரபல சாமியார் நித்தியானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. இந்நிலையில், ஹிந்துக்களுக்காக கைலாசாஎன்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதற்காக கைலாசாஎன்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்த கைலாசா நாட்டின் குடிமகன் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டிற்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடி, ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »