வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் சம்பந்தமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சர் ராஜித்தவை தேடி சி. ஐ. டி. யினரும், விசேட அதிரடிப்படையினரும் கொழும்பு 7 இல் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் இடங்களில் நேற்று பொலிஸார் தேடுதல் நடத்தியிருந்தபோதும் அவர் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை இதனால் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
