கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி முதல் 7 நாட்களில் இருந்த மிக மோசமான நிலையில் தற்போது இலங்கை இருக்கிறது என அரச மருத்துவர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகள் படி நாம் நடக்காவிட்டால் புது வருட கொண்டாட்டத்தின் போது மிக உச்சகட்ட நிலையை நாம் அடைய வேண்டி வரும் என அரச மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
