இராணுவ அதிகாரி உட்பட இருவர் கொரோனா வைரஸ் தாக்க அறிகுறி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்று கண்டறியப் பட்டுள்ளதாகவும் இருப்பினும் இருவரையும் தனிமைப் படுத்தி சிகிச்சை வழங்குவதாக யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
