Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டி

 


கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பஷீர் சேகுதாவுத், ஹஸன் அலி ஆகியோர் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதன் போது ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரும், தலைமை வேட்பாளருமான பசீர் சேகுதாவூத் அவர்களும் நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டார்.

அக்கட்சியின் சார்பில் பி.பிரபா, எச்.எம் வீரசேகர, கே.சுரேஸ், மரியான் விஜிலியாஸ், எம்.பீ முஸ்ம்மில் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »