கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் குவைத் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை சமூக ஊடகத்தில் விமர்சித்த இலங்கைப் பெண்ணொருவர் குவைத் சைபர் குற்றத்தடுப்பு அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் அங்குள்ள இலங்கையரை வெளியேற்றும் குவைத் மன்னர் நாயை போன்றவர் என்றும், அவர் பொறுப்பில்லாத ஒருவரென்றும் சமூக ஊடகத்தில் வசைபாடிய இந்த பெண்மணி, இலங்கை அரசை ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
