பாராளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி நடத்துவதற்கான முடிவை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்திருந்த நிலையில் 05ம் திகதி அதனை நடத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலை 08ம் திகதி நடத்துவதா? அல்லது 05ம் திகதி நடத்துவதா? என இன்று மாலை முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் கொண்ட வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்படவுள்ளது.
