இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நாளை கூடவுள்ள நிலையில் வரலாற்றில் முதன் முதலாக ஐ.தே.க வின் ஆசனம் வெற்றிடமாக இருக்கப் போகின்றது.
ஐ.தே.க மற்றும் அபே ஜனபல பக்ஷய ஆகிய கட்சிகள் தமக்கு கிடைத்துள்ள தலா ஒரு ஆசனத்திற்கு தேவையான உறுப்பினரை இதுவரை அறிவிக்காத நிலையில் பாராளுமன்றில் இந்த இரு கட்சிகளின் இடங்களும் வெற்றிடமாக இருக்கும் என பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசனாயக்க தெரிவித்துள்ளார்.
