(இராஜதுரை ஹஷான்)
கொழும்பில் மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி எதிர்தரப்பினர் சமூகத்தின் மத்தியில் இனவாதக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளார்கள்.
தேசிய மரபுரிமைகளையும், மக்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மரபுரிமை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. இவை குறித்து உரிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
அனைத்து இன மக்களின் தேசிய மரபுரிமை மற்றும் கலைகலாசாரங்கள் பாதுகாக்கப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எந்த ஓர் இனத்தின் உரிமைகளும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
