(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்துதற்ககான எதிர்பார்ப்புக்கு காரணம் அந்த பிரதேசங்களிலிருந்து வேறு பகுதிகளுக்கு தொற்று பரவக் கூடாது என்பதற்காகவே ஆனால் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்து வெளியேறுவதற்கே பலரும் முயற்சிக்கின்றனர். இவ்வாறு வெளியேறுவது மிகுந்த அபாயமானதாகும் என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.
அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
மேலும் மொனராகலை மாவட்டத்தில் அலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கல்முனை மாநகர சபையில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் இன்று (17) காலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் அதனை மேலும் விஸ்தரித்து கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
