Our Feeds


Sunday, December 13, 2020

www.shortnews.lk

SUPER MUSLIM பெயரில் கல்முனையில் அடிப்படைவாத குழுவை கண்டறிந்துள்ளதாக திவயின தலைப்பு செய்தி.

 



சுப்பர் முஸ்லிம் என்ற பெயரில் கலந்தர் லப்பே முகம்மத் என்ற பெயருடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக பட்டதாரியான மருத்துவர் ஒருவரினால் தீவிரவாத இயக்கம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக தியவிய ஞாயிறு பத்திரிக்கை தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

 

இவர் கடந்த 2019 ம் ஆண்டு முதல் சுப்பர் முஸ்லிம் என்ற பெயரில் பிரச்சாரங்களை செய்து வருவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுப்பர் முஸ்லிம் என்ற பெயரில் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஈரோட்டில் இருந்து யூடியுபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வரும் முஸ்தபா என்பவரின் தவறான போதனைகளினால் கவரப்படும் இளைஞர்களே இந்த சிந்தனைக்கு ஆட்படுகின்றனர்.

 

முஸ்தபா என்பவரின் சுப்பர் முஸ்லிம் குழுவின் பிரச்சாரங்களும் செயல்பாடுகளும் இஸ்லாத்திற்கு நேர் எதிரானது என்பதுடன் இவர்களின் பிரச்சாரத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை தெளிவூட்டி இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதையும் சுப்பர் முஸ்லிம் முஸ்தபா போன்றவர்களின் தவறான வழிகாட்டலுக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு விடக் கூடாது என்பதையும் தெளிவூட்டி தமிழகத்தின் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் பி.ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டவர்கள் கடந்த பல மாதங்களாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

 

அத்துடன் சுப்பர் முஸ்லிம் முஸ்தபா என்பவரின் வீடியோக்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு நேர் முரணான வழிகெட்டவைகள் என்பதையும், இஸ்லாம் காட்டாத செய்திகளை இஸ்லாத்தின் பெயரால் இவர் மக்கள் மத்தியில் பரப்புகிறார் என்பதை ஆதாரத்துடன் தெளிவூட்டி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உலமாக்கள் மற்றும் இஸ்மாயீல் ஸலபி, முஜாஹித் ரசீன் உள்ளிட்ட இலங்கை உலமாக்கள் பலரும் இவர்கள் தொடர்பில் பல விளக்கவுரைகளை ஆதாரத்துடன் நிகழ்த்தியுள்ளமை குறிப்பித்தக்கதாகும்.

 

இது போன்ற வழிகெட்ட இயக்கத்தினரின் சிந்தனைகளிலிருந்து முஸ்லிம்கள் விலகியிருப்பதும் இஸ்லாத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களில் இருந்து மாத்திரம் பெற்றுக் கொள்வதும் கட்டாயக் கடமையாகும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »