Our Feeds


Sunday, February 21, 2021

www.shortnews.lk

இம்றான்கானின் வருகையின் போது ஜனாஸா எரிப்புக்கு எதிராக பாரிய ஆர்பாட்டத்திற்கு அழைப்பு.

 



கொரோனா ஜனாஸா எரிப்புக்கு எதிராக எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்கிழமை மாலை 03.00 மணிக்கு கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு “பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிரான தேசிய அமைப்பு”  அழைப்பு விடுத்துள்ளது.


இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளும் குறித்த ஆர்பாட்டம் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கும், ஷாங்ரீலா ஹோட்டலுக்கும் இடையில் ஒதுக்கப்பட்டுள்ள ஆர்பாட்ட திடலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


நாளை மறுநாள் (22) மாலை பாகிஸ்தான் பிரதமர் இம்றான்கான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »