கலவானவில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலையின் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
நிவிதிகல பகுதியில் வைத்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 35 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 26 பேர் இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
