Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

கொரோனா ஏற்பட்ட பின் குழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய் - அறிகுறிகள் பற்றி வைத்தியர் விளக்கம்.

 


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே ஒரு நோய் பரவி வருவதாக இந்தியாவில் இருந்து சமீபத்தில் ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.


இலங்கையிலும் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குழந்தை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நோய் குழந்தைகளின் சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கிறது. 

அதன்படி, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறிகள்,

கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும் காய்ச்சல் இருப்பது,

கண்கள் சிகப்பு நிறமடைதல்,

நாக்கு சிகப்பு நிறமடைதல்,

சிகப்பு புள்ளிகள் ஏற்படுதல்.

வயிற்று வலி இருத்தல்.

இந்த அறிகுறிகள் 14 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்தால், குழந்தைகளை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டு  சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.

Liveat8

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »