Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

பேருவளையில் தாய், இரு பிள்ளைகள் உட்பட சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

 



(செ.தேன்மொழி)


பேருவளை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை பகுதியில் ஒள்ள வீடு ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக சூதாட்டம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.


இதன்போது வீடு ஒன்றில் தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் உட்பட ஐவர் இணைந்து இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பகுதியைச் சேர்ந்த 32 -55 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடமிருந்து தாயக்கட்டையொன்றும் 26,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »