(எம்.மனோசித்ரா)
இது குறித்து அவர் மேலும்
தெளிவுபடுத்துகையில், பிளக் பங்கசு நோயானது
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இலகுவாக தாக்கக் கூடியதாகும். இது
ஒருவரிலிருந்து பிரிதொரு பரவும் தன்மை கொண்டது. எமக்கு அயல் நாடான இந்தியாவில்
இந்த நோயும் தீவிரமாகப் பரவி வருகிறது. இலங்கையில் இந்நோயால் பாதிப்பு தொடர்பில்
இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்தியா
எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் மிக
அதிகமாகவே காணப்படுகிறது.
கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி
குறைவடைகிறது. அதனால் தான் இந்தியாவில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிளக் பங்கசு நோய் தாக்கம் அதிகமாகக்
காணப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த பங்கசானது கொவிட் -19 தொற்றின் காரணமாகப் பரவுகிறதா அல்லது வேறு காரணிகள் இதில் தாக்கம்
செலுத்துகின்றதா என்பதில் இந்தியா குழப்பமடைந்துள்ளது.
‘மிகோ மைகோஸிஸ்’ எனப்படும் பங்கசினால் இந்த நோய் பரவுகிறது. கொவிட் -19 தொற்றுக்கு மத்தியில் ஏனைய நோய்களுக்கு முகங்கொடுக்கக்
கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை
இலங்கையிலும் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.. எனவே இது தொடர்பில் மக்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
