வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மே 22 ஆம் திகதி ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என வளிமண்டளவியல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது 23 ஆம் திகதி தீவிரமடைய வாய்ப்புள்ளது , மேலும் 24 ஆம் திகதிக்குள் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து 26ஆம் திகதி ஒடிசா அருகே – மேற்கு வங்காள கடற்கரைகளை கடக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மே 21 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
