குருநாகல் நகரசபை மேயர் துஷார சஞ்சீவவின் பிறந்தநாள் நிகழ்வு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொண்டாடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இந்நிலையில், குறித்த பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
