முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டியபோது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (25) மாலை சுவாமி தோட்டம் தென்னந் தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததிலேயே அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்