கனகராசா சரவணன்
மட்டக்களப்பு – செங்கலடி, கறுத்தப்பாலத்தின் கீழே நீரோடையில் வீழ்ந்து இராணுவ ரக் வாகனமொன்று, இன்று (24) பிற்பகல் 4 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை மீறிய நிலையிலேயே ரக் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீரோடையில் இருந்து ரக்கை மீட்கும் நடவடிக்கையில் கனரக வாகனத்தின் உதவியுடள் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.