Our Feeds


Friday, July 16, 2021

www.shortnews.lk

பொலிஸ் அதிகாரிகளை போன்று வேடமிட்டு பலவந்தமாக பணம் பெற்ற நால்வர் கைது.

 



மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளை போன்று வேடமிட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் மொரகஹஹேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட, பிரதேசவாசிகள் அவர்களை தடுத்து வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர்களின் வீடுகளுக்குச் சென்று பொலிஸார் என தெரிவித்து பலவந்தமாக பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிலியந்தல, கல்கிஸ்ஸ, கட்டுபெத்த மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரோஹன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »