நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
