கொவிட் பரவலை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், கொழும்பு நகரில் வழமை போன்று வாகன போக்குவரத்து இடம்பெற்று வருகின்றமை தொடர்பான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
அத்தியாவசிய சேவைகளை தவிர, வேறு எந்தவொரு தரப்பிற்கும் வெளியில் வர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் வழமை போன்று வாகன போக்குவரத்து இடம்பெற்று வருவதை காண முடிகின்றது.




