உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி முஸ்லிம்கள் வணங்கும் ஏக இறைவன் அல்லாஹ் தான் என ஹிரு தொலைக்காட்சியின் “சலகுன” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஞானசார தேரர் பேசிய மத நிந்தனை கருத்துக்கு எதிராக இன்று கொழும்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹிரு தொலைக்காட்சியின் சலகுண நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அல்லாஹ்தான் என தெரிவித்திருந்தார். ஞானசார தேரரின் குறித்த சர்சைக்குறிய மத நிந்தனை பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான அர்ஷாத் நிஸாம்தீன் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.