Our Feeds


Friday, September 24, 2021

ShortNews Admin

பாராளுமன்றத்தில் மத வெறியை காண்கிறோம் - அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு மனித உரிமைகள் முன்னால் ஆணையாளர் கண்டனம்



எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமைச்சரின் இவ்வாறு தெரிவித்தமை இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கும் இது வழிவகுக்கும் எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


“நாடாளுமன்றில் மதவெறியை நாங்கள் காண்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர, முஜிபுர் ரஹ்மான் எம்.பி கூட ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »