ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால் தனது எம்.பி மற்றும் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து விட்டு மத்திய வங்கி ஆளுனர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ள நிலையில் அவருடைய எம்.பி பதவிக்கு முன்னால் எம்.பி ஜெயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதற்காக ஜெயந்த கெட்டகொட தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
