Our Feeds


Wednesday, September 29, 2021

ShortNews Admin

SHORT_BREAKING: இலங்கையில், தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என வெளியாகிய செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல! - பாதுகாப்பு செயலாளர்.



இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


பாதுகாப்ப செயலாளர் ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »