Our Feeds


Sunday, November 7, 2021

SHAHNI RAMEES

மேல் மாகாணத்தில் விசேட சோதனை - 1,019 பேர் கைது!

 

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 393 பேர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »