Our Feeds


Thursday, November 4, 2021

SHAHNI RAMEES

மத்திய, ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டன.

இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து தரங்களுக்கும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »