Our Feeds


Saturday, November 20, 2021

ShortNews Admin

எதிர்பார்க்காத வகையில் கடுமையாக உயரும் மரக்கறி விலை - இன்றைய நிலை



சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.


எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா்.

பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில் மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளா் அனில் இந்திரஜித் கருத்து தெரிவிக்கையில்,

மெனிங் சந்தைக்கு இன்றைய தினம் மரக்கறிகள் கிடைத்திருந்தாலும் கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது மரக்கறிகளின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உரப் பற்றாக்குறை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நுகர்வோா் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனா். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மரக்கறி விலையை போன்று ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையில எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதேவேளை, அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தலையிட்டு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »