Our Feeds


Friday, December 31, 2021

SHAHNI RAMEES

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு தயாராகும் மத்திய வங்கி


202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைந்து வருவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி W.A.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »