காட்டுப் பகுதியொன்றில் புல் உண்டமைக்காக 600 மாடுகளை தடுத்து வைத்துக் கொண்டு, அந்த மாடுகளின் உரிமையாளர்கள் ஐவரை கைதுசெய்த சம்பவம் அளுத்கம, 17ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.
அதன் பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மாடுகள் இன்னும் நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.