புத்தாண்டை வரவேற்பதற்காக நள்ளிரவு பட்டாசு வெடித்தபோது காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு மாத்திரம் 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 82 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீதி விபத்துக்கள் காரணமாகக் காயமடைந்த 47 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.