முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர் நீதிமன்றில் இன்று (24) முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் 4 வருட கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.